Monday 23 December 2013

Malaiyadipatty perumal

Malaiyadipatty Kanniraintha Perumal . Malaiyadipatty - 17 kms from Keeranur , Pudukkottai or the same
distance from Arasur pirivu in Trichy-Tanjore National Highway 4way road. 

நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா என்று யாராவது கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அடியேன் கடவுளைப் பல முறை பார்த்தேன், பல முறை பார்த்து விட்டேன், கடவுள் விரும்பினால் இன்னும் பல முறை அவரை தரிசனம் செய்வேன், என்று நீங்கள் கூறலாம். எப்போது இந்த பதிலை நீங்கள் கூற முடியும்?

நீங்கள் திருஅண்ணாமலையை பல முறை தரிசனம் செய்திருந்தால், பல முறை திருஅண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வழிபட்டிருந்தால் நீங்கள் இந்த பதிலைக் கூற முடியும். காரணம், ஆதி மூலப் பரம்பொருளாம் இறைவன் மலை வடிவில் எழுந்தருளிய திருஅண்ணாமலையை தரிசனம் செய்த அனைவருமே கடவுளை நேரிடையாகத் தரிசனம் செய்தவர்கள்தான்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருஅண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் எந்த வடிவில் காட்சி தந்து அருளினான்? அடிமுடி காணாத அருட் பிழம்பாக, ஜோதிக் கனலாக, சுடர் பிழம்பாக, ஒளி விட்டுப் பிரகாசிக்கும், விண்ணையும் மண்ணையும், ஆகாயத்தையும் பாதாளத்தையும் இணைக்கும் தூண் வடிவில் ஓங்கி உயர்ந்து நின்றார் சுவாமி.  

எம்பெருமானின் ஒப்பற்ற, எல்லையில்லா இந்த ஒளி பிரவாகத்தைத் தன் திருக்கண்களில் பூரணமாக நிறைத்துக் கொண்ட பெருமாள் மூர்த்தியே திருச்சி அருகே மலையடிப்பட்டி என்னும் திருத்தலத்தில் (பண்டைய பெயர் திருஆலத்தூர்) ஸ்ரீரங்கநாத மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு திருஅண்ணாமலையாரின் அருளாசிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

எம்பெருமானின் எல்லையில்லாத ஜோதி சக்தியை பாமர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் பெருங் கருணை கொண்ட விஷ்ணு மூர்த்தி தன்னுடைய திவ்ய நேத்ரங்களில் அருணாசல ஜோதியின் பேரொளியைத் தாங்கி அதை சாதாரண மனிதர்களும் பெருமளவிற்கு எளிமையான இறை சக்தியாக மாற்றி வழங்குகிறார்.

கமலக் கண்ணன் என்று பெருமாளை ஆழ்வார்கள் பாடி மகிழ்கிறார்கள், போற்றித் துதிக்கிறார்கள். செந்தாமரைக் கண்ணன், புண்டரீகாக்ஷ பெருமாள் என்று பெருமாளின் கண்கள் அத்துணை சிறப்புடன் புகழப்படுவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? ஆம், எல்லையில்லாத இறைவனின் திருக் காட்சியைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அழகிய மணவாளனாக விளங்கியதால்தான் பெருமாளுக்கு கண்ணன், கமலக் கண்ணன் என்ற அற்புத திருநாமங்கள் அமைந்தன. 

இக்காரணம் பற்றியே திருஆலத்தூரில்அருள் புரியும் ரெங்கநாத அண்ணல் கண்ணிறைந்த பெருமாள் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார். 

ஒரு முறை நமது சிறுவனான வெங்கடராம சுவாமிகளை கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த சுவாமிகள் இத்தலத்திற்கு அழைத்து வந்தார். ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்து நாட்களிலும் திருஅண்ணாமலையில் தனது குருநாதரான இடியாப்ப சித்தபிரானுடன் அன்னதான கைங்கர்யத்தை திருஅண்ணாமலையை கிரிவலம் அடியார்களுக்கு நிறைவேற்றி வந்தார் திரு வெங்கடராம சுவாமிகள். தனது ஒன்பதாவது வயதில் ஆரம்பமான இந்த அன்னதான வைபவம் பற்றி அடிக்கடி ஸ்ரீகுருமங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகள் குறிப்பிடுவது வழக்கம்.


முதன் முதலில் திருஅண்ணாமலையில் அன்னதான வைபவத்தை ஆரம்பிக்கும் முன்தான் மலையடிப்பட்டி திருத்தலத்திற்கு கோவணாண்டிப் பெரியவருடன் வருகை புரிந்தார். திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்திற்கு முதல் நாள் திருச்சி அருகே உள்ள திருஎறும்பூர் திருத்தல ஈசனை இடியாப்ப சித்தருடன் தரிசித்து விட்டு அத்திருக்கோயில் படிகளில் பெரிவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டிருந்தான் சிறுவன், 

பெரியவர் திருஎறும்பூர் மலையைச் சுட்டிக் காட்டி, ”இதை ஒரு சாதராண மலை என்று சொல்லிட முடியுதுடா, இனி வரப்போகும் காலங்களில் உலகையே ஆளும் கம்ப்யூட்டர் துறைக்கு வழிகாட்டியாக அமைவது இந்த மலைதான். இதன் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனிதனை விட 2000 மடங்கு கம்ப்யூட்டர் துறையில் முன்னேறிய நிலையில் உள்ளவையே இங்கு உள்ள எறும்புகள். இந்த எறும்புகளின் மூளை ஆற்றலை எவராலும் புரிந்து கொள்ள முடியாது.”

” அவ்வளவு ஆற்றல் இந்த எறும்புகளுக்கு எப்படி வந்தது, வாத்யாரே?”

”எதுவுமே ஈஸியா வந்துடாது, நைனா, எந்த வித்தையும் பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் வரும். அந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தை சரியா ஒரு மனிதன் அடைவதற்கு அவனுக்கு வழிகாட்ட எவ்வளவோ திருத்தலங்கள் பூமியில் உண்டு. அதில் ஒரு திருத்தலம்தான் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள கண்ணாயிரமுடையார் திருத்தலம். (இத்தல ஈசனுக்கு திரு வாகீசர் என்ற நாமமும் பிரசித்தம்), இங்கே இருக்கிற எறும்புகள் எல்லாம் ஒரு காலத்தில் அந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனையும் பெருமாளையும் வேண்டித்தான் தங்கள் பூர்வ ஜன்ம பயனால் அற்புத மூளை ஆற்றலைப் பெற்றன.”

சிறுவனுக்கு உற்சாகம் கரை புரண்டது.

”ஒரே இடத்தில் சிவனும் பெருமாளுமே இருக்கிறார்களா?”

”ஆமாண்டா, கண்ணு. கண்ணாயிரமுடையார் என்ற திருநாமத்தைத் தாங்கி எம்பெருமான் ஈசனும். அவன் திவ்ய உருவத்தைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அதன் காரணமாக கண்நிறைந்த பெருமாள் என்று பெயர் பெற்ற பெருமாள் மூர்த்தியும் ஒருங்கே உறையும் தலம்தான் திருஆலத்தூர் திருத்தலமாகும். (தற்போது இத்தலம் மலையடிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது), மிகவும் தொன்மையான திருத்தலம். இங்குள்ள பெருமாள் (திருச்சி) ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கே மூத்தவர் என்றால் அவருடைய பெருமை எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்.” 

சிறுவனிள் கண்கள் அகலமாக விரிய பெரியவர் மேற்கொண்டு கூறிய விஷங்களை கேட்டுக் கொண்டிருந்தான். தான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது கூட அவனுக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. காலையில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரி குளியில் முடித்து ஸ்ரீரெங்கநாதரின் தரிசனத்திற்குப் பின் நேரே திருவெறும்பூர் நடந்தே வந்து விட்டதால் நடுவில் உணவு ஏதும் சிறுவனுக்குக் கிடைக்கவில்லை. 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி குளியல் நிறைவேற்றியவுடன் தினமும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படும் பெருமாள் பக்தர்கள் அம்மாமண்டபம் சாலை வழியாக நடந்தே சென்று ஸ்ரீரெங்கப் பெருமாளைத் தரிசனம் செய்கிறார்கள் என்பது பெரியவர் சிறுவனுக்கு அளித்த திருவாய் மொழி. இது இன்றும் நடக்கும் ஆனந்த வைபவம். அத்தருணத்தில் அவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் அவர்கள் காற்றுப்பட்டால் கூட எல்லையில்லா அனுகிரக சக்திகள் கிடைக்கும் என்பது உண்மை. எனவே, முடிந்த மட்டும் திருச்சி வாழ் மக்கள் இந்த தெய்வீக சந்தர்பத்தை பயன்படுத்தி நித்திய சூரிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்று உய்வடைய வேண்டுகிறோம். 

பெரியவர் சிறுவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவில் திருஆலத்தூருக்குப் புறப்பட்டார். அக்காலத்தில் தற்போது உள்ளது போல் தார் ரோடுகள் கிடையாது. கருங்கல் ஜல்லிகள் நிரவிய சாலைகளே பெரும்பாலும் இருந்ததால், சிறுவன் மிகவும் சிரமப்பட்டு கோவணாண்டிப் பெரியவருடன் நடந்து வந்தான். தற்போது வழங்கும் பெயர்களான துவாக்குடி, அசூர் என்ற ஊர்களின் வழியாக சிறுவனை அழைத்துக் கொண்டு பெரியவர் திருஆலத்தூரை அடைந்தபோது சிறுவன் மிகவும் களைப்படைந்து விட்டான். ஆனால், அந்நிலையிலும் பெரியவர் அத்திருத்தலத்தைப் பற்றி அளித்த விளக்கங்களை தன் மனதினுள் நிறைத்துக் கொண்டான். 

பெரியவர், ”ஒருவர் தன்னுடைய பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளை முறையாகப் பெற வேண்டுமானால் இத்தல மூர்த்திகளை அவசியம் வழிபட்டாக வேண்டும். 

”கண்ணாயிர ஈசனை கண்களில் நிறைக்கவே எண்ணிறந்த வினைகள் எரிந்து சாம்பலாகுமே, என்று சிலக்காகித சித்தர் இத்தல ஈசனின் மகிமையை புகழ்ந்து பாடி உள்ளார். ஒரு மனிதனுடைய வினைகள் எரிந்து மறைந்தால் அவனுக்கு இறைவனுடைய காட்சி கிடைக்கும். அப்போது அவனுடைய கண்கள் இறை தரிசனத்திற்கான தகுதியைப் பெறும்,” என்று தொடர்ந்த பெரியவர் அத்தல மகிமைகளைப் பற்றி விளக்கிக் கொண்டே சென்றார்.

இருவரும் அத்திருக் கோயிலின் முன்னே ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்தனர். பெரியவர் கூறிய இறை விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் பல மைல்கள் நடந்து வந்த களைப்பில் அவர் மடியிலேயே படுத்துத் தூங்கிப் போய் விட்டான். 

Thursday 5 December 2013

பேரருளாளனான இந்தப் பெருமாளை ‘நாராயணா’ என்று உளமாற, வாயார, மெய்யுருகிச் சொல்லி உய்வடையும் பேறு நான் பெற்றேன்,’ என்று பாடி  கூத்தாடுகிறார். தங்களது மூத்த சகோதரன் தஞ்சகன் பகவானால் வதம் செய்யப்பட்டதை அறிந்த தண்டகன், அவரைத் தாக்க முற்பட்டான். ஆனால், பெருமாளின் பராக்கிரமத்துக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால், பயந்தோடி பாதாள உலகிற்குச் சென்று ஒளிந்துகொண்டான். அதை  அறிந்த திருமால் வராக உருக்கொண்டு, பூமியைக் குடைந்து சென்று, அவனைத் துரத்தினார். (இந்த வராகர் மீண்டும் பூமிக்கு மேலே எழுந்த  தலம்தான் ஸ்ரீமுஷ்ணம்.) தன்னை விடாமல் துரத்தி வரும் அவரை பயமுறுத்துவதாக நினைத்துக்கொண்டு  யானை உருக்கொண்டு பெருமாளை  எதிர்க்க முற்பட்டான். 

அதைக் கண்ட திருமால் தான் யாளி உருக்கொண்டார். சிங்க முகனாக, யானையுடன் பொருது அதனை வீழ்த்தினார். தண்டகன்  தலை சாயும் நேரத்தில், தன்னை பெருமான் ஆட்கொண்டு அருளவேண்டும் என்றும், தான் வீழ்த்தப்பட்ட அந்தப் பகுதி தண்டகாரண்யம் என்று  அழைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதோடு, தனக்குக் காட்சியளித்த அதே ‘வீரசிங்கப் பெருமாளா’க அங்கே அர்ச்சாவதாரம்  கொண்டு, பக்தர்கள் அனை வரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தான். அவன் விருப்பபடியே அவர் கோயில் கொண்டார்.  ‘தஞ்சையாளி’ என்று பெயரும் கொண்டார். சரி, இந்தக் கோயில் இப்போது எப்படி விளங்குகிறது?

இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்தால் வலதுபக்கம் திருமங்கை யாழ்வார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அ ருகே வாகனக் கூடம். பிராகாரச் சுற்றில் தஞ்சைநாயகித் தாயார் அழகு தரிசனம் அருள்கிறார். வடமேற்கில் நாகர்கள். ஆண்டாள் சந்நதிக்கு அருகில்  பரமபத வாசல். கருவறை மண்டபத்தில் கருடாழ்வார், இவருக்கு எதிரே அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக நெடிதுயர்ந் திருக்கிறார் மூலவர் நரசிங்கப்  பிரான். பிரமாண்ட தோற்றத்தால் பயமுறுத்தினாலும் கண்களில் பொங்கும் கருணைக்கு அளவே இல்லை. தண்டகனை வீழ்த்திய உக்கிரம், தினவெ டுத்த அந்த உடலில் தெரிந்தாலும், விழிகள் பிரதிபலிக்கும் வாஞ்சையில் மனசு உருகித்தான் போகிறது. 

ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள் பரிபாலிக்கிறார் இந்த சிங்கமுக சீலன். அதே கருவறை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாதர், வரதராஜப் பெருமாள், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தான், ஸ்ரீராமானுஜர், மணவாள  மாமுனிகள் ஆகியோரையும் தரிசித்து அருள் பெறலாம். பரமேஸ்வரன், லக்ஷ்மி நரசிம்மரைத் துதித்த ஸ்தோத்திரத்தை கருவறை மண்டபச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதேபோல கடன் நிவாரண  ஸ்லோகமும் இடம்பெற்றுள்ளது. வராக ரூபம் கொண்டு இங்கே பூமியைக் குடைந்து திருமால் சென்றதால், இந்தத் தலத்தை வராக க்ஷேத்திரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்தப்  பதியை ருணவிமோசன தலமாகச் சிறப்பிக்கிறார்கள். கடன் தொல்லைகளிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களை இந்த நரசிம்மப் பெருமாள்  கைதூக்கி விடுகிறார். இதனாலேயே பகை அழிக்கவல்ல திருத்தலம் இது என்று பூதத்தாழ்வார் பாடுகிறார்: 

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதில் குடந்தை என்பரே
ஏஅல்ல எந்தைக்கு ஏற்ற இடம்

‘பகை அழிக்கவல்லப் பெருமாள் எங்கெங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறார்?  சீர்மிகு திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தம் கதியாகக் கருதிப்  போற்றும் திருவேங்கடம், பக்தர்களை தன்னிடமும் திருப்பற்கடலை உணரவைக்கும் கடல்மல்லை, திருக்கோவலூர், மதில்களால் சூழப்பெற்ற திருக்கு டந்தை, இவை மட்டுமா, இந்த தஞ்சை மாமணிக் கோயில் மற்றும் இதற்கும் மேலாக பக்தர்களின் உள்ளம் இங்கெல்லாம் தான் அவர்  கோலோச்சுகிறார்’ என்று பாடி மகிழ்கிறார் பூதத்தாழ்வார். மூன்றாவதாக வந்தான், அரக்கன் தாரகன். பூமியிலிருந்து வானுக்குப் பெரும்புகையாக வளர்ந்தான். அடர்ந்து, கருப்பாகி, உலகையே இருட்டடித்தான்.  

அப்படியே பகவானையும் திக்குமுக்காட வைக்க நினைத்தான். ஆனால், பெருமாளோ பிரமாண்ட ரத்தின மலையாக, மணிக்குன்றமாக, உருவெடுத் தார். அந்த அசுரப் புகையை அப்படியே உறிஞ்சிக்கொண்டார், தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். அங்கேயே மணிக்குன்றப் பெருமானாக  அர்ச்சாவதாரம் எடுத்தார். 
மூன்றாவது அரக்கனை சம்ஹாரம் செய்வதற்காகப் பெருமாள் இந்த மூன்றாவது உத்தியைக் கையாண்டார். முதலிரு அரக்கர்களை வதம் செய்ததற்கு  ஒப்பான பராக்கிரமம் இந்த வதத்தில் இல்லை என்பதாலோ என்னவோ, மணிக்குன்றப் பெருமாளின் கோயிலும் மிக எளிமையாகவே விளங்குகிறது.  

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் அம்புஜவல்லித் தாயார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். மூலவர் மணிக்குன்றப் பெரு மாள், அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை மண்டபத்தில் ஆழ்வார்கள் தரிசனம் தருகிறார்கள். பொதுவாகவே தீவினைகளை அழிக்க பகவான் புது அவதாரமோ அல்லது புது உருவோ கொள்வதுண்டு. அந்த வகையில் இந்த மூன்று அரக்கர்களையும் அழிக்க பெருமாள் மூன்றுவகை வடிவங்களைக் கொண்டார். ஒரே தொகுதியாக மூன்று அசுரர்களை அழித்ததால் இம்மூன்று கோயில்களும்  ஒரே திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கின்றன இந்த முக்கோயில்கள். தஞ்சை மாமணிக் கோயிலுக்குச் சென்று நீலமேகப் பெருமாள், நரசிங்கப் பிரான், மணிகுன்றப் பெருமாள் மூவரையும் தரிசிக்கும்வரை இந்தத் தலத்து  இரு தியான ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்: (இந்த இதழுடன் தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் தரிசனம் செய்துவிட்டோம். (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி-திரு மலையையும் சேர்த்து). இனி மலைநாட்டு திவ்ய தேசங்கள் எனப்படும் கேரள மாநிலத் திருக்கோயில்களை அடுத்தடுத்து தரிசிப்போம். முதலில்,  அந்நாளில் மலை தேசத்துடன் இணைந்திருந்த இப்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயில் அருகே அமைந்திருக்கும்  திருவண்பரிசாரம் திருத்தலத்தை தரிசிப்போம்)  

தியான ஸ்லோகம்

நரசிங்கப் பெருமாள்
ஸ்ரீமத் தஞ்ஜ புராலயஸ்து பகவாந் ஸ்ரீமாந் ந்ருஸிம்ஹோ                                                                   மஹாந்
தேவி தஞ்ஜ புரீச்வரி ச்ருதி சிரோ வேத்யம் விமானம்பரம்
தீர்த்தம் தத்ரது காலிகாஹ்வயஸர: பச்யதிசம் தக்ஷிணாம்
மார்க்கண்டேய வரப்ரதான ஸுமுகம் சாஸீந ரூபோ ஹரி:
ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்
பொதுப் பொருள்:  தஞ்சையில், தஞ்சாபுரிநாயகித் தாயாருடன், சிங்கபிரானாகக் காட்சிதரும் பெருமாளே நமஸ்காரம். சுருதிசிரோ விமான நிழலில்  காலிகா தீர்த்தக் கரையில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த எம்பெருமானே நமஸ்காரம்.




மூலவர்

சொர்ணபுரீஸ்வரர்

உற்சவர்

அம்மன்

பெரியநாயகி

நடைதிறப்பு

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி)

இடம்

தெற்கு பொய்கைநல்லூர்

முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்

தகவல்

மூலவர் சொர்ணபுரீஸ்வரர், பெரியநாயகி அம்மன், வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர், மற்றும் காவல் தெய்வம் செல்லியம்மன் சன்னதிகள் உள்ளன. பிரார்த்தனை பெண்கள் திருமண வரம் கேட்டு இங்குள்ள காவல் தெய்வமான செல்லியம்மனை பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை வரம் வேண்டியும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு தாலி செய்தும், மாவிளக்கு எடுத்தும் காணிக்கை செலுத்துகின்றனர். தலபெருமை: காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அம்மனுக்கு நாகம் காவலாக இருப்பதாக நம்பிக்கை. அம்மன் கோயில் கதவுக்கு முன்பக்கம் நாகம் படுத்திருப்பதாகவும், பூஜாரி கதவை திறந்தவுடன், மணி சப்தம் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபட்டு பலனடையலாம். இந்த தோஷம் நீங்கினால், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு வாழ்க்கைத்துணை விரைவில் அமையும் என்பது நம்பிக்கை. ஆறுமுகத்துடன் முருகன்:வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முருகன் சிலைகள் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை. இவை மூலஸ்தானத்தில் உள்ளன. கோயில் கட்டியவர்கள் உருவாக்கிய முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் மூலஸ்தானத்தில் இடதுபுறத்தில் வைக்கப்பட்டு அதற்கும் பூஜை செய்யப்படுகிறது. பூமியில் கண்டெடுக்கப்பட்ட முருகன் ஆறு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். தெற்கு பொய்கை நல்லூரிலும் ஆறு முகத்துடன் முருகன் அருள்பாலிக்கிறார். சுயம்பாக கிடைத்த முருகன் சிலை என்பதால் வேண்டிய வரங்களை உடனுக்குடன் வழங்கும் அருள் பெற்றவராக திகழ்கிறார். மும்மத பிரார்த்தனை:மும்மதத்தினரிடையேயும் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் விழாக்காலங்களில் செல்லியம்மன், வேளாங்கண்ணி, நாகை கடைவீதி ஆகிய பகுதிகளில் உலா வருகிறாள். தொழில் அபிவிருத்தி ஏற்படவும், மீன் உற்பத்தி பெருகவும், நோய்கள் வராமல் இருக்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கோரி அனைத்து மதத்தவரும் தீ மிதி விழாவில் பங்கேற்கின்றனர்.நாவுக்கரசரால் பாடல் பெற்றதலமாகவும் அமைகிறது. தல வரலாறு: ஒரு காலத்தில், இலுப்பமரக்காடாக இருந்த நாகப்பட்டினத்தில், காவல் தெய்வத்துக்கு கோயில் கட்ட அங்கிருந்த வணிகர்கள் முடிவு செய்தனர். விக்ரகங்கள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு தான் கோயிலுக்கான அஸ்திவாரம் பொய்கைநல்லூர் பகுதியில் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியிலிருந்து சுவாமி, முருகன் வள்ளி, தெய்வானை சிலைகளும் பரிவார மூர்த்தி சிலைகள் கிடைத்தன. கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். தற்போதைய அம்பாள் சன்னதி அருகிலுள்ள பின்ன மரத்தை வெட்டும் போது, மரப் பொந்துக்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மரப்பொந்தில் முருகன், வள்ளி, தெய்வானை என பல சிலைகள் கிடைத்தன. மரப்பொந்தில் இருந்து கிடைத்த சிலைகளை கோயிலுக்குள்ளும், ஏற்கனவே செய்து வைத்திருந்த சுவாமி சிலைகளை கோயிலுக்கு வெளியேயும் பிரதிஷ்டை செய்தனர். இந்த கோயிலின் மூலவருக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினர். இவர்கள் அருகில் செல்லியம்மன் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: சுயம்பாக கிடைத்த வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிலை இத்தலத்தில் உள்ளது.

திருவிழா

வைகாசி விசாக நட்சத்திரத்தன்று தீ மிதி விழா நடக்கிறது.சிவராத்திரியன்று சுவாமி புறப்பாடு.

போக்குவரத்து

நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் ரோட்டில் 7வது கி.மீ.,ல் உள்ள பரவை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, இங்கிருந்து பிரியும் ரோட்டில் இரண்டு கி.மீ., ஆட்டோவில் சென்றால் தெற்கு பொய்கைநல்லூரை அடையலாம்.

மூலவர்

சனீஸ்வர பகவான்

உற்சவர்

அம்மன்

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இடம்

சோழவந்தான்

முகவரி

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான்-625 214, மதுரை மாவட்டம்.
மதுரை மாவட்டம்

தகவல்

சனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று. பிரார்த்தனை விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம். தலபெருமை: மாவலிங்மரத் தடியில் சுயம்புவாக தோன்றியதால் இதுவே ஸ்தல விருட்சமாயிற்று. விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம். தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தானிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் சித்திவிநாயகர் கோயிலுக்கு புத்தம்புது மலர்கள் பறிப்பதற்காக அமைக்க ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க பூ மரங்களும், மூலிகை குணம் கொண்ட செடிகளும் வளர்க்கப்பட்டன. அக்ரஹார மக்கள் இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தனர். காலப்போக்கில் இந்த நந்தவனம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் அடர்ந்து விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்க முன்பு, இந்த இடத்தை பக்தர்கள் மீண்டும் சுத்தப்படுத்தினர். மாவலிங்க மரத்தடியில் இளைஞர் ஒருவர் புற்களை அகற்ற மண்வெட்டியால் தோண்டிய போது ஏதோ தென்பட்டது. மூன்றடி ஆழத்திற்கு தோண்டியதும், காக வாகனத்துடன், நின்ற கோலத்தில் சனீஸ்வரபகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தனர். சிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ்வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.

திருவிழா

சனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

போக்குவரத்து

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள சோழவந்தானுக்கு அடிக்கடி பஸ்கள் உள்ளன.

மூலவர்

பிறவி மருந்தீஸ்வரர்

உற்சவர்

அம்மன்

பிரகன்நாயகி (பரியநாயகி)

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இடம்

திருத்துறைப்பூண்டி

முகவரி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.
திருவாரூர் மாவட்டம்

தகவல்

அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர். பிரார்த்தனை அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். தலபெருமை: அஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர÷தவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும். கஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார். தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர். தல வரலாறு: ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.

திருவிழா

சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.

போக்குவரத்து

திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

மூலவர்

அதிதீஸ்வரர்

உற்சவர்

அம்மன்

பெரியநாயகி, பிரகன் நாயகி

நடைதிறப்பு

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

இடம்

வாணியம்பாடி

முகவரி

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டம்

தகவல்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு. பிரார்த்தனை புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன்: பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தலபெருமை: மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை. தல வரலாறு: பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது.

திருவிழா

சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை

போக்குவரத்து

வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
தன் பக்தனுக்கு நன்மை செய்ய நினைத்து விட்டால், கண்ணபிரான் என்ன தகிடுதத்தம் செய்தாவது அதைச் செய்து விடுவான்.
தன்னையே கதியென சரணடைந்த பாண்டவர்களுக்கு வெற்றி தேடித்தர அவன் ஒருமுறை என்ன செய்தான் தெரியுமா?
குரு÷க்ஷத்திரப் போரின் முடிவு அர்ஜுனனின் வில்லாற்றலைப் பொறுத்திருந்தது. அர்ஜுனன் வில்லுக்கு எதிராக அதே திறனுடன் விடுக்கும் ஆற்றல், துரியோதனனின் சித்தப்பாவான விதுரருக்கு மட்டுமே இருந்தது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று கண்ணன் யோசித்தான்.
விதுரரும் கிருஷ்ண பக்தர். அவனே கதியென சரணடைந்தவர். தன் பக்தனின் வில்லும், அம்பும் நன்மையைக் கருதி மட்டுமே விடப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட கண்ணன், அவருக்கும் நன்மை செய்ய எண்ணினான்.
ஒருமுறை விதுரர் கண்ணனைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் சூரியனைக் காட்டி மேலே நோக்கி கை நீட்டி ஏதோ பேசினார். விதுரரும் அதே போல கை உயர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இதை தூரத்தில் இருந்து துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சந்தேகம் வந்து விட்டது. ""இந்த விதுரர், கண்ணனிடம் சூரியனைக் காட்டி சத்தியம் செய்து ஏதோ சொல்கிறார். இவரிடம் அதுபற்றி விசாரிக்க வேண்டும்,'' என்று எண்ணிக் கொண்டான். கண்ணன் சென்றதும், அதுபற்றி சித்தப்பாவிடம் ஆவேசமாகப் பேசினான். தனக்கு எதிராக நடந்ததாகக் குற்றம் சாட்டினான்.
விதுரருக்கு கோபம் வந்து விட்டது. தன் வில்லை ஒடித்து, ""போரில் நான் யார் பக்கமும் போரிடமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டார். கண்ணனின் திட்டம் எளிதாகப் பலித்து விட்டது.
திருச்சியில் வசித்த ஒரு பெண்மணி, தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தன் மகளின் திருமணத்திற்காக பத்து பவுன் தங்கச்செயின் வாங்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். இதை நோட்டமிட்ட ஒருவன், அவள் பஸ் ஏறும் போது, நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அவள் அலறித்துடித்தது தான் மிச்சம். 
அவள் நேராக சமயபுரம் சென்றாள்.
""மாரியம்மா! சமயபுரத்தாளே! சமயத்தில் உதவும் கருணைக்கடலே! என் நிலையைப் பார்த்தாயா! நீ குடிகொண்டிருக்கும் இந்த ஊரில் இப்படி நடக்கலாமா?'' என்று அழுதாள், அரற்றினாள். என் நகையைத் திருடியவனுக்கு தீராத நோய் வரட்டும். அதை அணிந்த அவன் வீட்டுப் பெண்ணின் கழுத்து வீங்கட்டும்,'' என்று வயிற்றெரிச்சலில் சாபமும் கொடுத்தாள். 
பல வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து அம்பாளை வேண்டினாள். ஒரு ஆண்டும் ஓடிவிட்டது. மகளின் திருமணமும் நின்று போய் விட்டது.
ஒரு வெள்ளிக்கிழமை அவள் கோயிலுக்குச் சென்ற போது, ஒரு பெண்ணுக்கு கழுத்து வீங்கியும், அவள் கணவனுக்கு உடம்பெல்லாம் புண்ணுமாக வந்தனர். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், தீராதது பற்றி அம்பாளிடம் புலம்பினர். அதே சமயத்தில், அங்கு வந்த பெண்ணும் தன் நகை காணாமல் போனது பற்றி புலம்பவே, அவர்கள் திடுக்கிட்டனர். அந்தப் பெண்ணின் நகையைத் தான், அந்த திருடன் பறித்திருந்தான். திருடியே பணக்காரனாகி விட்ட அவன், உண்மையை உணர்ந்து அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். தவறாகச் சேர்த்த பொருளையெல்லாம் கோயிலுக்கு செலுத்தி விடுவதாக வாக்கு கொடுத்தான். 
அந்தப் பெண்ணின் மகளைத் தன் மகனுக்கே திருமணம் செய்து வைப்பதாக அவன் கூறினான். தன் மகன் பெரிய தொழிற்சாலை அதிபர் என்றும், நியாயமாகத் தொழில் செய்பவன் என்றும் எடுத்துரைத்தான். அந்தப் பெண்ணின் மகள், தொழிலதிபருக்கு வாழ்க்கைப்பட்டாள். தன் பக்தையின் நலனுக்காக சமயபுரத்தாள் நிகழ்த்திய அற்புதம் இது. நவராத்திரியில் அந்தக் கருணைக்கடலை வணங்கி வருவோமே!
Click Here
ஒரு பணக்காரர் துறவியிடம் போனார். 
அவரிடம், ""மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,'' என்றார்.
பணக்காரரோ பெரிய கருமி.
""பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?'' என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து, 
""நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,'' என்றார்.
அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான்.
அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர். 
""வீட்டுக்கு போவதற்குள் இந்த பழங்கள் அழுகி விடுமே! இதைப் போய் தானம் செய்கிறாராக்கும்,'' என்று எண்ணிய வேலைக்காரி, அங்குள்ள பண்ணையில் இருந்த பால் கறப்பவனிடம் கொடுத்து, ""இவற்றை மாட்டுக்கு கொடுங்கள்,'' என்றாள்.
""அழுகும் நிலையிலுள்ள பழத்தை மாட்டுக்கு கொடுத்தால் ஆகாது,'' என்ற அவன் அவற்றை விட்டெறிந்தான்.
தன் கருமித்தனத்தால் பணக்காரரும் செல்வத்தை இழந்தார்.
மற்றவர்கள் மனம் குளிரும் வகையில் தானம் செய்தால் தான் புண்ணியம். தானத்திலும் கருமித்தனம் கூடாது. புரிகிறதா!
தெய்வா! பணம் தான் உலகில் கடவுள். பணமில்லாதவனை யாரும் மதிப்பதில்லை. நேற்று வரை நம் மளிகைக்கடையில் அருமையாக வியாபாரமாயிற்று. யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடையிலிருந்த பொருட்களை யாரோ திருடிச் சென்று விட்டனர். கடனுக்கு பொருள் கொடுத்தவர்கள் துன்பப்படுத்துகிறார் கள். சரி...நடந்ததை நினைத்துப் பயனில்லை. தர்மர் திரவுபதியும், நள தமயந்தியும், அரிச்சந்திரன், சந்திரமதியும் படாத கஷ்டமா! இருக்கிற வீட்டையும், உன் நகையையும் விற்று கடனை அடைப்போம். பின் பார்த்துக்கொள்ளலாம்,'' என்றான் ராமசாமி தன் மனைவியிடம்.
அவளது பெயர் தெய்வநாயகி. 
"தெய்வா' என செல்லமாக அழைப்பான். இந்த சம்பவத்திற்குப் பின் அவனைக் கண்டவர் எல்லாம் ஒதுங்கினர். கவலையில் ராமசாமிக்கு கடும் காய்ச்சல். வைத்தியர் கூட, பணம் கொடுத்தால் தான் வருவேன் என அடம்பிடித்தார்.
தெய்வா, தன் இஷ்டதெய்வமான அம்பிகையை வணங்கினாள்.
அர்ச்சகர் அவளிடம்,""மகளே! நீ அம்பாளின் குங்குமத்தை இட்டுக்கொள். உன் மாங்கல்யத்துக்கு பங்கம் வராது,'' என்று சொல்லி அனுப்பி வைத்தார். அர்ச்சகரின் சொல் பலித்தது. ஒருவழியாய் அவனும் எழுந்தான்.
உலகில் நல்லவர்கள் இல்லாமலும் இல்லை. ஒரு தோழி, தெய்வாவுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தாள். அதைக் கொண்டு, அவள் காய்கறிக்கடை வைத்தாள். அதில் கிடைத்த லாபத்தில், அரை வயிற்று கஞ்சி கிடைத்தது. ஏழையாகப் பிறக்கலாம்..... தவறில்லை. வறுமை பழகிப் போகும். வாழ்ந்து மட்டும் கெடக்கூடாது.. தெய்வா, தன் நிலையை எண்ணி வருந்தினாலும், தன் 
கணவன் சொன்னபடி "தமயந்தி, சந்திரமதிக்கு நேர்ந்தது போல, கணவனை விட்டு பிரியாமல் வாழும் சந்தர்ப்பமாவது கிடைத்ததே என ஆறுதலடைந்தாள்.
ஒருமுறை, அந்நாட்டு அரசன், தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அது குணமாக, யாராவது ஒரு அந்தணருக்கு தங்கக்காசுகள் தானம் செய்ய முடிவெடுத்தான். ஆனால், இதை தானம் வாங்குபவருக்கே தெரியாமல் செய்ய வேண்டும் என்பது ராஜகுரு விதித்த நிபந்தனை. எனவே, ஒரு பூசணிக்காயைக் குடைந்து, உள்ளிருப்பதை வெளியே எடுத்து விட்டு, காசுகளைக் கொட்டினான். ஒரு அந்தணருக்கு அதை தானம் செய்தான். உள்ளே காசு இருப்பதை அறியாத, அந்தணர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார்.
வீட்டில், ஏற்கனவே ஒரு பூசணிக்காய் இருந்ததால், அதை, தெய்வாவின் காய்கறி கடையில் பாதி விலைக்கு விற்று விட்டாள், அந்தப் பெண் அப்போது, கடை அடைக்கும் நேரம் என்பதால், விற்காத பூசணிக்காயுடன் வீட்டுக்குப் போனாள் தெய்வா. மறுநாள், அதை சமைப்பதற்காக வெட்டப்போக, உள்ளிருந்து தங்கக்காசு கொட்டியது. சம்பந்தப்பட்டவரை தேடி கொடுத்து விடலாம் என அவள் முயன்ற போது, கொடுத்தது யார் என அறிய முடியவில்லை.
அந்தப் பணத்தைக் கொண்டு மீண்டும் கடை துவங்கினான் ராமசாமி. அம்பாள் அவனையும், தெய்வாவையும் கைவிடவில்லை. முன்பை விட நல்ல நிலையை அடைந்தனர் அவர்கள். வாழ்வென்றும் தாழ்வென்றும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. அந்த சுழலில் சிக்காதவர்கள் உலகில் யாருமில்லை.
ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வேங்கடவன் அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே, வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம்.
தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர். பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது. ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம். மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.
""சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது. ஏழையாய் பிறந்த பாவத்தால் என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக வாங்க முடியவில்லை,''. அவன் பரிதாபமாக சொன்னது கேட்டு, குரு சிரித்தார். அமைதியாய் பேசினார், ""மகனே! அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் துளிக்கூட உண்ண இயலாது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா! தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா? 
பிறருக்கு பகிர்ந்தளித்தல் தான்! அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது.
திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது. இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும். இறைவனின் கருணையும் அப்படித்தான். 
அவனது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.
உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறு துண்டை, நீ எடுத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே வந்து விடுவான்,'' என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.
Click Here
தானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை, காலணி தானம் என்கிறது ஒரு கதை.
பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது, கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று.
""ஏன் தாமதமாக வந்தாய் தேவி?'' என்றார் ஜமதக்னி.
""நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன் காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன்,'' என்றாள்.
ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் திருப்பினார்.
""சூரியனே! உலகோரை சுட்டெரிப்பதற்கும் ஒரு அளவில்லையா?'' என்று கேட்டு பாணத்தைத் தொடுக்கும் முன், சூரியன் கீழே வந்துவிட்டான். ஜமதக்னியை சரணடைந்தான். ஒரு குடையையும், காலணிகளையும் ரேணுகாதேவிக்கு கொடுத்து, வெயிலில் இருந்து காத்துக் கொள்ளும்படி வேண்டினான்.
கோடையோ, மழையோ குடையும், காலணியும் தானமாகக் கொடுத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

Deyvathaai

பிங்கல நாட்டின் மன்னன் ரகுநாதன். அவனது மனைவி சியாமளா கருவுற்றாள். நாடெங்கும் விழாக்கோலம். 
தங்கள் இளவரசன் வரவுக்காக மக்கள் காத்திருந்தனர். பிரசவநாளும் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனைகள் வழங்க, தாதிகள் அரசிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். மிகக்கடுமையான வலி வந்தும் குழந்தை பிறக்கிற வழியைக் காணோம். ரகுநாதன் வேண்டாத தெய்வமில்லை. ஒருவழியாய் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அத்தோடு, "ஓவென' தாதியர்கள் அழும் குரலும் கேட்டது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்திருந்த ரகுநாதன், தொடர்ந்து வந்த தாதியர்கள் அழுகுரல் கேட்டு அதிர்ந்தான். ஆம்... 
குழந்தையைப் பெற்றுக் கொடுத்த சியாமளா, ஜன்னி கண்டு இறந்து விட்டாள்.
""பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். என் மனைவிக்கு அந்தப் பிறவி கிடைக்காமல் போயிற்றே!'' என ரகுநாதன் கலங்கி அழுதான். குழந்தையைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் என்ற கவலையும் சேர, சோர்ந்து போனான்.
தாதிகள் குழந்தையைக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களில், தன் நம்பிக்கைக்குரிய பவானி என்பவளைத் தேர்ந்தெடுத்த ரகுநாதன், "" பவானி! இவனை இனி உன் குழந்தை போல் கவனித்து வா!'' என்றான். பவானியும் மகிழ்வுடன் சம்மதித்தாள்.
பவானியின் கணவன் ஏற்கனவே இறந்து விட்டான். 
அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தாள். 
மனைவியின் இறப்பால், சோகத்தில் ஆழ்ந்திருந்த மன்னனால் நாட்டின் நிர்வாகத்தில் சீராக கவனம் செலுத்த முடியவில்லை. இதைப் பயன்படுத்தி, அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். 
ஆனால், மக்களோ மன்னனைத் தான் தூற்றினர்.
ரகுநாதனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி, அவனை நாட்டே விட்டு துரத்தி விட வேண்டும். தாதியிடம் வளரும் இளவரசனைக் கொன்று விட வேண்டும். தங்களில் ஒருவர் ராஜாவாகவும், மற்றவர்கள் ராஜபிரதிநிதிகளாகவும் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டனர்.
திட்டத்தின் முதல் கட்டமாக, இளவரசனைக் கொல்ல சதி செய்தனர். இதை பவானி தெரிந்து கொண்டு விட்டாள். இளவரசனைக் கொல்ல வரும் நாளில், அவனை வெளியே அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் மறைவாக வைத்து விட்டாள். தன் மகனுக்கு இளவரசன் போல் அலங்காரம் செய்து, அவன் படுக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள். சதிகார அமைச்சர்கள், இருளில் பதுங்கி வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பவானியின் மகனை, இளவரசன் எனக்கருதி கொன்றனர்.
விஷயம் மன்னனுக்கு தெரிந்தது. அவன் பவானியின் தியாகத்தைப் பாராட்டினான். அமைச்சர்கள் செய்த சதியை மக்களுக்கு தெரியப்படுத்தினான். மக்களுக்கு உண்மை தெரிய வரவே, அவர்கள் அமைச்சர்களை கட்டி இழுத்து வந்தனர். அந்த ராஜதுரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட்டனர்.
மகனின் பிரிவைத் தாங்காத பவானி கவலையில் இறந்து போனாள். அந்த தியாகத்தாயை தெய்வமாக மதித்து, அவளுக்கு சிலை வடித்தனர். மன்னன் அவளுக்கு கோயில் எழுப்பினான். அவள் பிங்கலநாட்டின் குலதெய்வமாக வணங்கப்பட்டாள்.
Click Here
பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி சுவாரஸ்யமாக விவரித்துக் கொண்டிருந்தார்.
"" கஜேந்திரன் என்னும் யானை தாமரைத் தடாகத்தில் மலர் பறிக்க வந்தது. குளத்தில் இருந்த கூகு என்ற முதலை, யானையின் காலினை இழுத்தது. முதலையின் வாயில் க்கிக் கொண்ட யானை செய்வதறியாது திகைத்தது. தான் வழிபடும் பெருமாளே கதி என்று நினைத்து "ஆதிமூலமே' என்று அபயக்குரல் எழுப்பியது. குரலைக் கேட்ட பெருமாள் வைகுண்டத்திலிருந்து கருடன் மீது பறந்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினார்,'' என்று சொல்லிக்கொண்டிருந்த போது, உபன்யாசத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார்.
""பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டம் வரை எப்படி கேட்கும்? அதைக்கேட்டாலும் கூட பெருமாள் உடனே எப்படி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்?'' என்றார்.
நிகழ்ச்சியை விவரித்துக் கொண்டிருந்த பாகவதருக்கு இதற்கு பதில் தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்னவர் விழிக்க ஆரம்பித்து விட்டார். உடனே பாகவதரின் மகன் எழுந்தான்.
""ஐயா! உங்கள் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன்,'' என்றான். சிறுவனின் பதிலைக் கேட்க அனைவரும் ஆர்வமாயினர்.
""மக்களே! வைகுண்டம் என்பது எங்கோ வானத்தில் இல்லை. அவரவர் இருக்குமிடமே வைகுண்டம் தான்! அதாவது கூப்பிடு தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறான். நம்பிக்கையோடு அழைத்தால் அவன் உடனே ஓடி வருவான், '' என்றான். அனைவரும் இந்த பதில் கேட்டு கைதட்டினர். நம்பிக்கையே பக்தி என்ற உண்மையை உணர்ந்தனர்.

கடவுளை அதிகம் சிந்திப்பது யார்?
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர், ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது, அவனது இதயநாயகி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில், அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார்.
""கண்ணாடியைப் பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்று கேட்டார்.
""மாமா! இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன்,'' என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு.யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்! அவன் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான்.
""இதென்ன விந்தை,'' என அபிமன்யு கேட்டான்.
""அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு,'' என்றார். பார்த்தீர்களா! நோக்கம் 
எதுவானாலும், பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை!

Click Here

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்



அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.


நட்சத்திரவடிவம்:- 


அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்
அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு.



வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்:-

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய
்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.
பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.
பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.
ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.
ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.
மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,
தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

Grow Trees

உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்
மரம் நமக்கு என்ன தருகிறது?

மலர்கள், காய், கனிகள் தருகிறது

நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது

காற்றை சுத்தப்படுத்துகிறது

நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.

மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.

மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.

காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.



ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.

ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.

ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.

மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.



ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.



மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.

இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.

மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.